
இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள போதிலும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.
13 அவது திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே பாய்ச்சலில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியாது எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வலுவான மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றமை இயல்பான நிலைமையே, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முனைப்புக்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழ் மக்கள் சரியான முறையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவின் 20 ஆவது நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் வரதராஜ பெருமாள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment