
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா மிக கோலாகலமாக நேற்று இடம்பெற்றது. சுமார் முப்பதாயிரத்துக்க்கும் அதிகமான பக்தர்கள் ஆலயததை தரிசிக்க வருகை தந்தார்கள்.
கடந்த காலங்களில் வன்னியில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக ஆலயத்தில் பொங்கல் விழா இடம் பெறாமலேயே இருந்து வந்தது.இன்றைய யுத்தம் அற்ற சூழலில் ஆலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் , வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து ஏனைய இடங்களில் வாழ்பவாகள்,யாழ்ப்பாணம் கிளிநோச்சி வவுனியா மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மககள் வந்து பொங்கிப் படைத்தனர்.
காவடிகள் எடுத்தனர். நேர்த்திக்கடன்களை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றினர். ஆலய வாசலில் ஆயிரக்கணகான பானைகளில் மககள் அம்மனுக்கு பொங்கி படைத்தனர். அதே நேரம் ஆலய சுற்றாடலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் .
No comments:
Post a Comment