



வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்
No comments:
Post a Comment