Sunday, June 13, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் புலிகளால் அச்சுறுத்தலா,?

Sunday, June 13, 2010
அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பமாக இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கோவையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார். உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் 7000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் கடந்த வருடம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்து இன்றும் முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கி விடப்பட்டிருக்கும் நிலையில் இப்படியொரு மாநாடு இந்நேரத்தில் அவசியம் தானா? என்று ஏராளமான விமர்சனங்கள் பல தரப்பட்ட தமிழர் அமைப்புக்களில்தமிழ்புத்திஜீவிகளிடம்இருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டில் ம.தி.மு.க பங்கேற்க மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது குறித்து கோவை நகரப் பொலிஸ் ஆணையாளர் சைலேந்திரா பாபு தெரிவித்தவைவருமாறு:
நாம் எல்லா விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எமது உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மிகுந்த கரிசனை எடுத்துச் செயற்பட்டு வருகிறார்கள்.மாநாட்டுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது”

சட்டவிரோத வேலை வாய்ப்பு நிலையம் மீது நடவடிக்கை,

Sunday, June 13, 2010

வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சட்டத்தை மீறும் வகையில் குருநாகலில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த முகவர் நிலையம் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தமக்குரிய நடவடிக்கைகளைத் தவிர ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லை

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது தமிழகம்,

Sunday, June 13, 2010

தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

இதற்கேற்றாற் போல், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மலைக்கோட்டை ரயில் இப்பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைதி கலாசாரம் என்று இருந்த நிலை மாறி, ஆயுதக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�க்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல் துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.

போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக, சட்ட விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடருமேயானால், சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து, விரைந்து செயல்பட்டு, தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

Friday, June 11, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும்,

Friday, 11 June 2010
சபாநாயகர்.சமல்.ராஜபக்ஸவினால்.கோரிக்கைக்.கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

சிறுவர் இல்லச் சிறுமிகள் விபசாரத்தில்! பொலிஸ் விசாரணை!!

Friday, 11 June 2010
சிலாபம் நகரை அண்மித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாகப் பொலிசார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.

நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பில் இச்சிறுவர் இல்லம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
14 முதல் 16 வயது வரையிலான சிறுமியரே இவ்வாறு விபசார நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வெளியேறிய இவர்கள் வீடொன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சிறுமிகளில் இருவர் சிலாபத்திலும் ஒருவர் காலியிலும், நான்காமவர் நவகத்தேகமவிலும் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை அழைத்துச் சென்ற நீர்கொழும்பு, கதிரான பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கிடைத்த தகவலொன்றுக்கமைய பொலிசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

புலிகள் சார்பு வலையமைப்புக்கள் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சி!

Friday, 11 June 2010
புணானையில் படைவீரர் மத்தியில் பாதுகாப்பு செயலர்

சர்வதேச மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற புலிகள் சார்பு பயங்கரவாத வலையமைப்புக்கள் இலங்கையில் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புலிகள் சார்பு சர்வதேச வலையமைப்புக்களின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை புலனாய்வூத் துறையினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர்இ இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் கவன யீனமாக இருக்க முடியாதென்றும் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைத்து அதனை மேலும் வளப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

வெலிகந்தைஇ புணானையிலுள்ள இராணுவத்தின் 23வது படையணியின் தலைமையகத்துக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த நான்காயிரத்து க்கு மேற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு புலி களின் சர்வதேச மட்ட நிதித் தொடர்புகள்இ ஆயூதத் தொடர்புகள் போன்ற பாரிய வலையமைப்புக்கள் உள்நாட்டு புலனாய்வூத் துறையின ராலும் வெளிநாடுகளின் ஒத்துழைப் புடனும் முடக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒரு சில வலையமைப் புக்கள் தொடர்ந்தும் சர்வதேசமட்ட த்தில் செயற்பட்டு வருவதாகவூம் தெரி வித்தாh;. அதன் அழுத்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவ தில்லை. ஒரு யூகத்தைக் கடந்து புதியதொரு யூகத்தில் நாம் காலடி வைத்துள்ளோம்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நாம் தவற விடக்கூடாது. அப்பாவி பொதுமக் களைப் பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்ற வெற்றியை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆரம்பக் கட்ட த்தை எமது எதிர்கால படிப்பினை யாக கொள்ளவேண்டும். அப்போது தான் எதிர்காலங்களிலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாது செயற்பட முடியூம்.

இவ்வாறான பயங்கரவாதத்தின் அடித்தளம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் கிளம்புவதற்கு இடமளிக்கக் கூடா தென்றும் இதற்கமைவாக நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத் தப்பட்டு அங்குள்ள பாடசாலைக ளிலும் கட்டடங்களி லும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பதிலாக வடக்குஇ கிழக்கில் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர முகாம்கள் அமைத்து சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படு மென்றும் தெரிவித்தார்

சீன உப பிரதமர் தலைமையில் உயர் குழு இலங்கை வருகை!

Friday, 11 June 2010
சீன உப பிரதமர் சியாங்க் டிஜியாங்க் தலைமையில் கொழும்புக்கு வருகை தந்துள்ள உயர் மட்டக் குழு பிரதமர் தி.மு. ஜயரத்னவை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றது.
இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

சீன உப பிரதமர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவூ கொழும்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை பதில் வெளி விவகார அமைச்சர் கீத்தாஞ்ன குணவர்தன கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

Thursday, June 10, 2010

இந்திய தமிழக எம்.பிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடன் சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய மக்களவையில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மவூரியா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கநிதி அமைச்சசின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் பங்குகொண்டனர்.

இந்திய தமிழக குழுவில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கனிமொழிடி.கே.எஸ்.இளங்கோவன் ஏ.கே.எஸ்.விஜயன்.ஜி.சுகவனம ஆதிசங்கர் அப்துல்ரகுமான் ஆர்.தாமரைச்செல்வன்ஜே.கே.ரிதீஷ் எஸ்.ஆர்.ஜெயதுரை ஏ.ஏ.ஜின்னா வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிசங்கர ஐயர் எம்.கிருஷ்ணசாமி கே.எஸ்.அழகிரி பி.விஸ்வநாதன் மாணிக் தாகூர் ஜெயந்தி நடராஜன் .எம்.சுதர்சன நாச்சியப்பன் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோரும் கலந்து கொண்டனார்

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியூள்ள மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியூள்ளார்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வூக்காக அரசினால் செயற்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டம் இந்திய உதவியூடன் துரிதமாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி இந்திய அமைச்சா;களுக்கு இச்சந்திப்பின்போது விளக்கிக் கூறினார்

இந்திய வர்த்தகரைத் தாக்கிய 3 பேருக்குப் பிணை,

Thursday, June 10, 2010
சிலாபம் ஆராச்சிக்கட்டுவப் பகுதியில் இந்திய வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிக்கட்டுவப் பிரதேசத்தில் தும்பு சார்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இந்திய வர்த்தகரைக் கடத்திச்சென்று தாக்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே பொலிசார் இவர்களைக் கைது செய்தனர்.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த வர்த்தகரை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடத்திச்சென்று தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

ஊழியர் பிரச்சனையை மையமாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்திய வர்த்தகர் ஆராச்சிக்கட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகப் பொலிசார் கூறினர்.

ஜனாதிபதி – சோனியா சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

புதுடெல்லி மயூ+ரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கஇ நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் பங்கு கொண்டனர்.

இந்தியாவூக்கும் இலங்கைக்குமிடையில் மிக நீண்டகாலமாக நிலவூம் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு திருமதி சோனியா காந்தி குறிப்பிட்டார்

இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியூள்ளதென்றம் அவா; கூறினார்

ஜனாதிபதி இரண்டாவது முறையாகவூம் மக்களால் தெரிவூ செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருமதி சோனியா காந்தி இரு நாட்டுத் தலைவா;களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையூம் வலியூறுத்தினார்

Wednesday, June 9, 2010

அமைச்சர் றிசாத் பதியுதீனைச் சந்தித்தார் வியட்நாம் பிரதி அமைச்சர்.

Wednesday, 09 June 2010
கைத்தொளில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, வியட்நாம் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதி அமைச்சர் டொன் லீ குஆங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேற்படி அமைச்சில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலையடுத்து தமது நாடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக பிரதி அமைச்சர் டொன் லீ குஆங், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறையில் இலங்கை, வியட்நாம் இருதரப்பு நாடுகளினதும் உறவை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் செயல்படுவது வரவேற்கக் கூடியதாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வியட்நாம் தனது முதலீடுகளை செய்வதைத் தாம் பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு

Wednesday, 09 June 2010

டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இதன்போது போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துவர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.

கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் தலைவா;கள் பலா; கைது!

Wednesday, 09 June 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்புத தொpவித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவா;கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரை தமிழ்நாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனா;.

தென்னிந்திய அரசியல்வாதிகளான வைகோ பழ. நெடுமாறன் தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர் மகேந்திரன் நல்லகண்ணு போன்றௌரும் அடங்குகின்றனர்.

தமிழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம் இலங்கை வங்கி போன்ற பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் திருப்பூர் மயிலாடுதுறை சிவகங்கை கோவை காந்திநகர் நாகர்கோவில் கரூர் சென்னை ஓசு+ர் தேனி நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன,

Monday, June 7, 2010

ஜனாதிபதி நாளை இந்தியாவூக்கு உத்தியோகபூh;வ விஜயம்!

Monday, June 7, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை இந்தியாவூக்கு உத்தியோகபூh;வ விஜயம் ஒன்றை மேற்கொள்கிறாh;.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல்இ பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்இ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திஇ வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாஇ நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிஇ எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவூள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்இ பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷஇ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க இ ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கஇ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினர் அங்கு 11 ஆம் திகதிவரை தங்கியிருப்பர் என்றும் இதன்போது சில உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வூ ஒப்பந்தங்கள் என்பன கைச்சாத்திடப்படும் என்றும் வெளிவிகார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்,

ஜீ. எஸ். பி. சலுகை பெற ஐ. நா. ஒத்துழைக்கும்!

Monday, June 7, 2010
ஜீ. எஸ். பி. சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு ; ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின்; இலங்கைக்கான பிரதிநிதி நீல்பூனே பிரதமாpடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி நீல்பூனே பிரதமர் டி. எம். ஜயரட்னவைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

உலக வர்த்தக நடவடிக்கைகளில் போட்டித் தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கு இலங்கைக்கு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெறுவது மிக முக்கியமானதாகும். இந்தச் சலுகை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்கும்.

இதனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்புச் செயற்பாடுகளில் உதவத் தயார் எனவூம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஐ. நா. திருப்தி யடைந்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதைக் காண முடிகிறது.

ஐ. நா. அமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்குத் தொடர்ந்தும் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும். தற்போது கொழும்பு மொன ராகலை பதுளை மாவட்டங்களின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வருகிறது.

தொடர்ந்தும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க எதிர்பார்த்துள்ளது எனவூம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜயரட்ன் யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கு இந்த ஜீ. எஸ். பி. சலுகை பெரிதும் உறுதுணையாக முடியூம். எனினும் இச் சலுகையைப் பெறுவதற்காக சர்வதேசத்திற்குப் பின்னால் செல்வதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவூம் தெரிவித்துள்ளார்,

Saturday, June 5, 2010

ஜனாதிபதியினால் மூவருக்கு விருது வழங்கி கௌரவம்!

Saturday, June 5, 2010
கார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் , மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் இந்திய திரைப்பட நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கௌரவித்தார்.
சீ.என்.பீ.ஸி - ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை - இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வூக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

ஐஃபா இந்திய திரைப்பட விழா இறுதிநாள் வைபவம் இன்று!

Saturday, June 5, 2010
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இறுதி நாள் வைபவம் இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படுவதோடு கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விவேக் ஒபரோய்இ விபாசா பாசுஇ தியாமிர்ஸா உட்பட நட்சத்திர பிரபலங்கள் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
லாரா தத்தாஇ பூமன் இராணிஇ ரித்தீஸ் தேஷ்முக் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர்.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் ஐபா சர்வதேச வர்த்தக சம்மேளன மாநாட்டுடன் நேற்று ஆரம்பமானது. இம்மாநாடு நேற்றுக் காலை 9 மணியளவில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்த இம்மாநாட்டில்இ இந்தியத் தூதுவர் அசோக் காந்தாஇ இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தஷரூர் ஆகியோர் உட்பட இந்திய மற்றும் இலங்கையின் வர்த்தகத் துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் பலர் உரையாற்றினர்.
இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான அனுபம் கீன்இ ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்குஇ கிழக்கு பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேபோல யூத்தத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஒரு நாட்டில் விளையாட்டுத்துறையை குறிப்பாக கிரிக்கெட்டை அனைவரையூம் ஈர்க்கும் துறையாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலொன் றும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய நடிகை தியா மிர்ஸாஇ இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாஇ அஜய் ஜடேஜா உட்பட சிலர் கலந்து கொண்டனர். இதற் கிடையில்இ சிலோன் கொண்டினென்ட் ஹோட்டலில் சினிமா பயிற்சிப்பட்டறையொன் றும் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை இடம்பெற்றது.
மதியம் 1 மணிக்குஇ இலங்கை அணி வீரர்களுக்கும் இந்தியத் திரை நட்சத்திரங்களுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெற்றது.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் பவூன் ஷோவின் இரண்டாம் கட்டம் நேற்று காலை சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது

Friday, June 4, 2010

ஐஃபா விழாவில் சில நடிக நடிகையர் இல்லை,அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

Friday, June 4, 2010
இலங்கையில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சில நடிக நடிகைகள் பங்கேற்கவில்லையென அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.

இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ க்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள்மூலம் இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
பயங்கரவாதம் நிலவியபோதும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதைப் போன்று தற்போதைய பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் தகவல் தருகையில் அமிதாப்பச்சன் நாட்டிற்கு வருகைதரமாட்டார் எனும் விடயத்தை எவ்வாறு எதி்ர்நோக்குவது என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டினார்

முதலமைச்சர்கள் மாநாடு மாரவிலையில்,

Friday, June 4, 2010
மாகாண முதலமைச்சர்களின் மாநாடு புத்தளம் மாவட்டத்தின் மாரவில நகரில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த மாநாட்டில் மாகாணங்களில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் பொதுவாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நீண்டகால இடைவெளியின் பின்னர் மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் தென்பகுதி மீனவர் மீன்பிடிக்கத் தடை,

Friday, June 4, 2010
வடக்குக் கிழக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மீனவர்களுக்கு மட்டுமே கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு மாகாணங்களில் அவ்வப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாத்திரமே மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமெனக் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு வட கிழக்குப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென அமைச்சர் தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கினால் அனாவசியப் பிரச்சனைகள் உருவாகலாமென அவர் சுட்டிக் காட்டினார்.

Followers

Blog Archive