Thursday, October 21, 2010

யாழில் வெறுமனே கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு.

Thursday, October 21, 2010
யாழ்க்குடாநாட்டிலும் சரி வடக்கிலும் சரி அரச அதிகாரிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்புகளை வழங்காது வெறுமனே கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக இன்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்தக் கடுமையான சீற்றத்தை வெளியிட்டிருந்தார். அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் திறக்கப்பட்டிருந்தது. பெரும் சர்ச்சைகள் மத்தியில் இரண்டே இரண்டு வகுப்புகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வகுப்புகள் உரும்பிராயிலுள்ள தற்காலிக தனியார் காணியிலேயே இயங்கி வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது இந்தப் பாடசாலைகள் திறக்கப்பட்டு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வேளையில் சில புகைப்படங்களை காண்பித்த ஜனாதிபதி குறித்த பாடசாலை முழுமையாக திருத்தப்படவோ அல்லது சீர் செய்யப்படவோ இல்லையெனவும் விளம்பரங்களை தேடும் வகையில் நீங்கள் விழாக்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதாக தனக்கு முறைப்பாடுகள் வந்து கொண்ட வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இந்த நிகழ்வில் கத்துரசிங்க போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலையில் ஜனாதிபதியின் இந்தக் குற்றச்hட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அரச அதிகாரிகள் தொடர்பாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கில் தனக்கு போதிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி தனது சீற்றத்தை வெளியிட்டிருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குப் பாராட்டு.

Thursday, October 21, 2010
இலங்கையின் பொருளாதாரம் சிறந்த வளர்ச்சியைக் காட்டுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குறுங்காலப் பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அறிவித்துள்ளது.

தற்போதைய சாதகமான சூழல், எஞ்சியுள்ள பொருளாதாரச் சவால்களை முறியடிப்பதற்கும் தனியார் துறை வளர்ச்சிக்குமான உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குத் தொடர்ச்சியான மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவிலான நேர்த்தியான சந்தை முதலீடுகள் மற்றும் முன்னேற்றகரமான வர்த்தகச் சூழல் என்பவற்றின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகை மற்றும் பொதுக் கடன்களை உடனடியாகக் குறைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான செலவீனத்தையும் குறைக்க வேண்டுமென நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூகச் செலவீனம், மீள் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புக்கான முதலீடுகளுக்காக அரச வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நன்கு திட்டமிடப்பட்ட வரி முறைமையை அதிகாரிகள் சமர்ப்பிக்க முன்வர வேண்டுமென்றும் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாதகமான பொருளாதார மறுசீரமைப்பு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய திறவுகோலாக இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் அமையுமென நம்புவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றும் குழு மேலும்தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐநாவுக்கு.

Thursday, October 21, 2010
ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு நாளை அல்லது நாளை மறுதினங்களில் தமது அறிக்கையை சமர்பிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படங்களை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். செனல் 4 காட்சிகள் தொடர்பான பொய்த் தன்மையை ஏற்கனவே நாங்கள் உலக அளவில் தொழிநுட்பத்தில் பிரசித்திப் பெற்றவர்களை வைத்து நிரூபித்துக் காட்டினோம். அவர்களுக்கு சவாலும் விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை அந்தச் சவாலை பொறுப்பேற்கவில்லை.

அதனால் அது தொடர்பில் நான் அதிகம் கதைக்க விரும்பவில்லை. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் இலங்கைத் தொடர்பான தீய நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இலங்கையை அவர்களுடைய கை பொம்மைகளாக மாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனக் கூறினார்.

Tuesday, October 19, 2010

புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ய முயன்றவர் குற்றவாளியானார்!

Tuesday, October 19, 2010
புலிகளுக்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய 48 வயதான பால்ராஜ் நாயுடு என்ற சிங்கப்பூர்ப் பிரஜை 15 ஆண்டுச் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட நபர் உள்ளிட்ட 5 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் தென் பசுபிக் தீவான குவாமில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்

புலிகளுக்காகக் கைக்குண்டு எறியும் ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் உட்பட மேலும் பல ஆயுதங்களைக் குறிப்பிட்ட சிங்கப்பூர் பிரஜை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தமை அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது

புலிகள் தடை மீதான வழக்கு ஒத்திவைப்பு!

Tuesday, October 19, 2010
புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்து விசாரணை செய்து வரும் தீர்ப்பாய விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கும் படி உத்தரவிடக் கோரி தமிழக மக்கள் உரிமை கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக மக்கள் உரிமை கழகம், புலிகள் இயக்கத்தின் அனுதாபி என்ற முறையில் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை செய்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிமன்றில் ஆஜராகி கருத்து தெரிவிக்கையில், தடை நீட்டிப்பு குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தில் தங்களது தரப்பு கருத்தை மனுவாக தாக்கல் செய்ய தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ, அதன் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ தவிர மற்ற யாரையும் அனுமதிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பாய விசாரணையில் மனுதாரர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றார்.

விசாரணைக்குப் பின்னர் தமிழக மக்கள் உரிமை கழகம் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Sunday, October 17, 2010

எஸ்.எம். கிருஸ்ணா நவம்பரில் இலங்கை விஜயம்.

Sunday, October 17, 2010
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தமது பதவியேற்றதன் பின்னரான முதலாவது இலங்கை விஜயத்தை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 25 ம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கை - இந்திய ஒருங்கிணைப்பு ஆணையக கூட்டத்தில் இந்திய தரப்பின் தலைவராக பங்கேற்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களுக்கு நேரடியாக செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த பிரதேசங்களின் புனரமைப்பிற்கு பங்களிப்பை மேற்கொள்ள இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.

தென்னிந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான சோமன் ஷலி மல்லையா கிருஷ்ணா இந்தியாவின் அரசியலில் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பதுடன் கடந்த 5 தசாப்தங்களாக பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான அமைச்சரவையில் இணைவதற்கு முன்னர், கர்நாடக மாநிலத்தின் தலைமை அமைச்சராக 1999 ம் ஆண்டுமுதல் 2004 ம் ஆண்டுவரை பதவி வகித்துள்ளார்.

அதற்கு முன்னர் மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக 2004 ம் ஆண்டுமுதல் 2008 ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார்.

இந்திய தகவல் தொழினுட்ப துறையின் முக்கிய பங்காற்றும் பங்களுரின் நவீன தந்தையென இவர் கல்விமான்களினால் புகழாரம் சூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சிசபை தேர்தல் வேட்பாளர் தெரிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு.

Sunday, October 17, 2010
உள்ளுராட்சி சபை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமது வேட்பாளர் தெரிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவி;த்துள்ளது.

இந்த தகவலை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்;.

இதனிடையே, மாகாண சபைகளின் அனுமதிகள் கிடைத்தவுடன் திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பி;ட்டார்.

அதனைத் தொடர்ந்து, பரிந்துரைகளுக்கு அமைய அந்தந்த தொகுதிகளுகளின் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவுகளை நேற்று ஆரம்பித்துள்ளது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்திற்கு ஏற்ற வகையில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Friday, October 15, 2010

ராஜபக்ஷே கொடும்பாவி எரிப்பு; கோவையில் வைகோ, அர்ஜுன் சம்பத் கைது.

Friday, October 15, 2010
கோவை: காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழாவிற்கு, ராஜபக்ஷே வருவதைக் கண்டித்து, கோவையில் ராஜபக்ஷேயின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன; வைகோ, அர்ஜுன் சம்பத் உட்பட, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். டில்லியில், காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை அழைத்திருப்பதைக் கண்டித்து, ம.தி.மு.க., சார்பில், கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், நேற்று காலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, நேற்று காலையில் 100க்கும் மேற்பட்டவர்கள், கறுப்புக் கொடிகளுடன் அங்கு கூடியிருந்தனர். காலை 10.45 மணி வரையிலும் ஆர்ப்பாட்டம் துவங்கவில்லை. 11.00 மணியளவில், "பொதுச் செயலர் வர்றாராம்' என்ற தகவல், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பரவியது. இதைக் கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைய, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில், வைகோ அங்கு வந்து சேர்ந்தார். உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட அவரை, திரும்பிச் செல்லுமாறு முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதை மறுத்த வைகோ, ஆர்ப்பாட்டத்தில் தானே பேசுவதாகக்கூறினார். அவருடன் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் வந்திருந்தார். அதுவரையிலும், "மைக்'கிற்குக் கூட ஏற்பாடு செய்யாமலிருந்த நிர்வாகிகள், அவசர அவசரமாக "மைக்' ஏற்பாடு செய்தனர். வைகோ வந்ததும், அவரை வாழ்த்தி, தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். உடனே வைகோ குறுக்கிட்டு, "ராஜபக்ஷே ஒழிக' என்று கோஷம் எழுப்புமாறு கூறினார். உணர்ச்சிப்பூர்வமாக அர்ஜுன் சம்பத் கோஷங்களை எழுப்ப, அவரைத் தொடர்ந்து வைகோவும் கோஷம் எழுப்பினார்; இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகத்தோடு பதில் கோஷம் எழுப்பினர். ராஜபக்ஷே, சோனியா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின், வைகோ பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிப்பதற்குள் ராஜபக்ஷே கொடும்பாவியை சில தொண்டர்கள் கொண்டு வந்து ரோட்டில் போட்டு எரிக்க முயன்றனர். பாதி எரிவதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார், அரைகுறையாக அதைப் பறித்துச் சென்றனர். அதன்பின், தொண்டர்கள் கொண்டு வந்த இரண்டு உருவ பொம்மைகளையும் போலீசார் பறித்து விட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், வைகோ, அர்ஜுன் சம்பத் மற்றும் மூன்று பெண்கள் உட்பட, 146 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன், ராஜபக்ஷே கொடும்பாவி எரிக்கப்போவதாக வந்த தகவலால் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வந்தபின், நிதானமாக வெளியில் வந்த தொண்டர்கள், போலீசாருக்கு முன்பாகவே கோஷங்களை எழுப்பி, இலங்கைக் கொடிகளை கிழித்து எறிந்தனர். ராஜபக்ஷேயின் படத்தைச் செருப்பால் அடித்துக் கிழித்தனர். அங்கிருந்த 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அந்த வாகனம் கிளம்புவதற்குள், காந்திபுரம் சிக்னல் பகுதியிலிருந்த போலீசார் சத்தம் போட்டு, இங்கிருந்த போலீசாரைக் கூப்பிட, தலை தெறிக்க அங்கு ஓடினர். அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சுசி கலையரசன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், ராஜபக்ஷே உருவபொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் பெரும் போராட்டம் நடத்தி, அவர்களிடம் இருந்த உருவபொம்மையை சல்லி சல்லியாகப் பிரித்துப் பறித்தனர். கோஷம் எழுப்பிய அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அந்த வாகனம் கிளம்புவதற்குள், அதே கட்சியின் தொண்டர்கள் ஐந்து பேர், சிக்னலுக்கு சற்று தொலைவில் சத்தி ரோட்டில் ராஜபக்ஷே உருவ பொம்மையைப் போட்டு எரித்தனர். போலீசார் செல்வதற்குள் அது பெருமளவு எரிந்து முடிந்தது. ஒரு குடம் தண்ணீரை ஊற்றி போலீசார் அணைத்து விட்டு, மீதமிருந்த சிறு பகுதியை போலீஸ் ஜீப்பில் பத்திரமாகக்கொண்டு சென்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால் போலீசார் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டனர். உருவ பொம்மை எரிக்க முயன்ற இளைஞர்கள் படுவேகமாக ஓட, கனத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் உள்ளூர் போலீசார் திணறினர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் இருந்தும், இரண்டு உருவபொம்மைகளை எரித்து விட்டனர். போலீசார் அங்குமிங்குமாக ஓடுவதையும், உருவபொம்மையை பறிப்பதற்குப் போராட்டம் நடத்தியதையும் அவ்வழியாக பஸ்களில் சென்ற ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர். போலீசாரின் தொப்பையைக் குறைக்க, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடத்தி வரும் பயிற்சிகளை விட, போராட்டக்காரர்களால் போலீசாருக்கு நடந்த ஒரு மணி நேர, "பரேடு' மிகவும் சுறுசுறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் இருந்தது.

Sunday, October 10, 2010

அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி-–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Sunday, October 10, 2010
அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி காணப்படுவதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் காணப்படும் பிணைப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது காரியாலயங்களில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாகவும் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரப்பகிர்வு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

எனினும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரத்தை பகிர்வதன் மூலமே முழுமையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் பகிரப்படாமல் மக்களின் ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்படாத காலத்திற்கு ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக லக்பிம பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதியின் படம் தொடர்பான விஷமத்தனமான கருத்துக்கு அரசாங்கம் கண்டனம்.

Sunday, October 10, 2010
நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை மாநாட்டில் கலந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தம்பதியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள விஷமத்தனமான விமர்சனங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
சர்வதேச மாநாடுகளின் நடைமுறைகள் பற்றித் தெரியாத சில ஊடகங்கள் பொது மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான தவறான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது.

ஐ.நா. மாநாடுகளில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்று உபசரிப்பது வழமையான ஒரு சம்பிரதாயமாகும்
இம்முறை இச்சந்திப்பு நியூ+யோர்க்கில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயற்கை நூதன சாலையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியாருடன் அமெரிக்க ஜனாதிபதியையூம் அவரது பாரியாரையூம் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கும் அமெரிக்காவூக்கும் இடையில் நெடுக்கால நட்புறவூ நிலைக்கின்றது. வா;த்தக ரீதியிலான நெருங்கிய தொடர்பும் உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தொடர்பில் பிழையான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரியது.
வெளிநாட்டுத் தலைவர்களின் தூதுக் குழுவில் உள்ள எந்த படப்பிடிப்பாளாருக்கும் இந்த இடத்தில் படம் எடுக்க அனுமதியில்லை. அங்குள்ள உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளரே அதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவரிடமிருந்தே ஜனாதிபதியின் படமும் கிடைத்துள்ளது. இது இணையத்தளங்களிலும் வெளியானது.

தமது தீருகுதாளங்களை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பதால் இப்படம் தொடர்பில் பிழையான தகவல்களை எந்த ஊடகமும் ஆங்கில மொழியில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டில் சீரற்ற காலநிலை நீடிக்கிறது.

Sunday, October 10, 2010
மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்கின்றது.

இதன் காரணமான கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான்கதவுகள் இரண்டு நேற்று திறக்கப்பட்டு இன்று மூடப்பட்டுள்ளது. கெனியன் மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பொகவந்தலாவை, நோர்வூட், சாஞ்சிமலை ஆகிய பகுதி ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

மேலும் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அடிக்கடி மின் துண்டிப்பும் இடம்பெற்று வருகின்றது.

Friday, October 8, 2010

ராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்தார்.

Friday, October 8, 2010
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் உப தலைவருமான வீ. ராதாகிருஷ்ணனுக்கும் தமக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக மலையக மக்கள் முன்னணியின்; தலைவர் சாந்தினி தேவி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இந்த பேச்சு வார்த்தை இன்று இடம்பெற்றது.

இதன் போது, உயர் பதவி ஒன்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மலைகய மக்கள் முன்னணியின் தலைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளாh.

இதேவேளை இது தொடர்பாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணனை வினவிய போது, பேச்சுவர்த்தை வெற்றியளித்ததாக தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியால் வழங்கப்பட போதும் உயர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Friday, October 8, 2010
ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

நேர்காணல் :

முதலாவதாக வடகிழக்கு மாகாணசபைக்கு என்ன நேர்ந்தது? அபகீர்த்தியான ஒருதலைப் பட்ச சுதந்திரப் பிரகடனத்துக்கு வழி கோலியது எது?

முதலில் மாகாணசபைகளின் உருவாக்கத்துக்கு வழியமைத்தது எது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவை இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கைப் பிரகாரம் இன மோதல்களுக்கு ஒரு தீர்வு காண்பதற்காக 13 வது திருத்தத்தின் மூலமாக நிறுவப் பட்டவை. ஆனால் மாகாணசபைகளின் தேர்தல்கள் தெற்கில் மட்டுமே நடத்தப் பட்டன. நாங்கள் தேர்தல் எங்களுக்கும் தேவை என வற்புறுத்தினோம். ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகள் இங்கு இல்லாதபடியால் அதைப் பயன் படுத்தி புலிகள் தாங்கள் மட்டுமே மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தெரிவித்தார்கள்.

நான்அரசாங்கத்திடம் தெரிவித்தேன்,மக்கள் மற்றொரு குழவினரை அதிகாரத்துக்கு தெரிவு செய்தால் அவர்களால் அப்படிச் சொல்ல முடியாது என்று.இறுதியாக ஜே.ஆர்.1988 நவம்பரில் தேர்தல்களை நடத்துவதற்குச் சம்மதித்தார். எனது அரசாங்கம் 1988 டிசம்பரில் உருவாக்கப் பட்டது.இதன் சில மாதங்களின் பின்னர், ஜே.ஆர். இன் பதவிக் காலம் முடிவடைந்து பிரேமதாஸ பதவிக்கு வந்தார்.

பிரேமதாஸ 13 வது திருத்தத்தைப் பலப்படுத்தப் போவதாகச் சொன்ன போதிலும், ஜனாதிபதியாகப் பதவி ஏற்றவுடனேயே மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்கத் தொடங்கினார்.அ ரசாங்கத்துடனும், எதிர்கட்சித் தலைவர்களுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் அதிகாரப் பரவலை முன்னகர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த என்னால் இயன்ற மட்டும் முயற்சித்தேன். ஆனால் எவருமே அதிகாரப் பரவலாக்கத்தில் ஆர்வம் காட்டவில்லை.அத்துடன் பிரேமதாஸ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்க ஆரம்பித்தார். புலிகளும், ஸ்ரீலங்கா இராணுவமும் ஒருவருக்கொருவர் உதவத் தொடங்கினார்கள்.எங்கள் இயக்கத் தோழர்கள் கொலை செய்யப்படலானார்கள்.எங்கள் இயக்கம் வெட்டிக் குறைக்கப் படலாயிற்று.எங்களின் நாட்கள் முடிவுக்கு வரத்தொடங்கி இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதனால் ஒரு போராட்டத்துடனேயே வெளியேறுவதற்கு முடிவு செய்தோம்.

1987க்கு முன்பு நாங்கள் ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.ஆனால் இந்தோ-லங்கா உடன்படிக்கையின்படி நாங்கள் எங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வன்முறையற்ற நீரோட்டத்தில் கலந்து கொண்டோம்.ஆனால் எங்களுக்கு இந்திய ஸ்ரீலங்கா அரசுகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை.எனவே இறுதியாக எனது கட்சியும், மாகாணசபையின் பெரும்பான்மையோரும் எங்கள் இறுதிக் கோரிக்கைகளை முன்வைக்க யோசித்தோம். நாங்கள் 19 அம்சக் கோரிக்கைகளை உருவாக்கி அதை மாகாணசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம்.மேலும் இதை இந்திய ஸ்ரீலங்கா அரசுகளுக்கும் அனுப்பி வைத்தோம்.ஆனால் யாரும் எங்கள் 19 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை.இந்தக் கோரிக்கைகள் பெடரலிசம் எனப்படும் கூட்டு ஒருங்கிணைப்பைக் கூட கொண்டிருக்கவில்லை எல்லாமே ஒற்றையாட்சி முறைக்குள் அடங்கியிருந்தன. 19 அம்சக் கோரிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதற்கு வேண்டி நாங்கள் ஒரு எதிர்க்கோரிக்கையையும் இணைத்திருந்தோம்.அரசாங்கம் எங்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்று ஒரு வருடத்துக்குள் நடைமுறைப் படுத்தாவிட்டால்,நாங்கள் பிரிந்து போகத் தீர்மானித்துள்ளோம் என்பதே அது.

தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் 19 அம்சக் கோரிக்கைகள் பற்றி எதுவும் அறிந்திருக்க வில்லை.எப்படியாயினும் பார்வையின் பின்னணியில் அந்த எதிர்க் கோரிக்கை ஒரு பாரதூரமான தவறு…..?

நல்லது. என்ன நடந்ததென்றால் நாங்கள் செய்ததைப் பற்றி மிகத் தீவிரமான ஒரு விரிவரன விளம்பரப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் பிரபாகரன், இந்த இரண்டு ‘பிக்களும் சேர்ந்து மிகவும் திறமையாகவும் கூர்மதியுடனும் பெருமாள் தன்னிச்சையாக ஈழத்தைப் பிரகடனப் படுத்தி விட்டார் என வெளியுலகிற்கு பரப்பினார்கள்.அது உண்மையில்லை.எனது பிரகடனம் 19 அம்சக் கோரிக்கைகளே.இன்றும் முழுச் சிங்கள தேசமும் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தில் என்னைக் கூட்டுச் சேர்க்கிறதேயன்றி எனது 19 அம்சக் கோரிக்கைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

நான் நினைக்கிறேன் சரித்திரம் உங்களின் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டது என்று. பிரேமதாஸவும் புலிகளும் சேர்ந்து எங்களை நாட்டை விட்டு வெளியே வீசுவதில் வெற்றிகண்டிருந்த போதிலும் நாங்கள் வெளியேறும் முன் அரசாங்கத்தை எச்சரித்திருந்தோம்,இரத்தம் சிந்துவதற்கும் துன்பம் பெருகுவதற்குமான ஒரு அத்தியாயத்திற்கு அவர்கள் கட்டியம் கூறுகிறார்கள் என்று.பயங்கரவாதிகள் பக்கம் சார்ந்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி மீது தாக்குதல் நடைபெறக் காரணமாக இருந்த அரசாங்கம் ஒரு தீய உதாரணத்தைத் தந்தது. எப்படியாயினும் பிரீமதாச புலிகளுடனான தேனிலவு நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. நான் ஒன்றைப் பற்றி மிகவும் மனவேதனைப் படுகிறேன் பிரேமதாஸ ஒரு சிறிய அளவிலேனும் எங்களுடன் ஒத்துழைத்திருந்தால் 1990 களுக்குப் பிறகு நாங்கள் இழந்த மிக அதிகளவிலான 200,000 உயிர்களையும் இந்த நாடு காப்பாற்றி இருக்கலாம்.இது சிங்களத் தலைவர்களின் தெiலை நோக்கப் பார்வையின் குறைவினால் ஏற்பட்டது.

19 அம்ச பிரேரணைகளைப் பற்றி விபரிக்க முடியுமா?

இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கையின் நறுமணம் அரசியலமைப்பில் எதிரொலிக்க வேண்டுமென நாங்கள் கூறினோம்.13 வது திருத்தம் ஒரு நல்ல சட்டவாக்கம் அல்ல.அது முறையான அதிகாரப் பகிர்வினைத் தடைசெய்து மத்தியினை நோக்கியே சகலதையும் வழி நடத்துகிறது.மற்றோர் முக்கிய அம்சம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஆயதப் படைகளில் இணைத்து நாட்டின் மக்கள் தொகையியலை அதில் பிரதிபலிக்கச் செய்தல்.அப்போது ஒரு விகிதத்திலும் குறைவான தமிழர்கள் கூட பாதுகாப்புப் படையில் இருக்கவில்லை. அதே நிலமைதான் இன்றும் கூட. நாங்கள் மேலும் வடக்கு கிழக்கினை மீள் எல்லை வரையறை செய்ய விரும்பினோம்.மாகாணங்களின் பல மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இருந்தன.அவர்கள் தங்கள் பாதுகாப்பில் கவலை கொண்டிருந்தார்கள்.அவர்களின் கவலை சட்டபூர்வமானதென்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.அவர்களின் அச்சத்தைப் போக்க எல்லை வரையறைகள் அவசியம் என்பதை உணர்ந்தோம். வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருக்கும் அதிகளவான சிங்களக் குடியேற்றங்கள் அருகிலிருக்கும் சிங்கள மாகாணங்களுடன் இணைக்கப் படவேண்டும் அதாவது திருகோணமலையிலுள்ள சிங்களக் குடியேற்றங்கள் பொலன்னறுவையுடனும் அம்பாறையிலுள்ளவை, மொனராகலையுடனோ அல்லது அம்பாந்தோட்டையுடனோ இணைக்கப் படுதல்.எனவே பெரியளவு சிங்கள மக்கள் தொகை சிங்கள மாவட்டங்களுடன் இணைக்கப் பட்டு விடும்.

நீங்கள் 1990 களில் நாட்டை விட்டு வெளியேறினீர்கள்.இந்த 20 வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.எது உங்களைத் திரும்பி வரத் தூண்டியது?

நான் 1990 ம் ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறினேன்.ஏனெனில் இங்கு வாழ்வது பாதுகாப்பாக இருக்கவில்லை. அத்தோடு பிரேமதாஸவின் மரணத்தின் பின்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழில் என்னால் திரும்பி வரமுடியவில்லை.பிறகு சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தார் நான் அவருடன் பேசினேன் ஆனால் அங்கிருந்து சாதகமான ஒரு மறுமொழி கிட்டவில்லை.1998லேயே அவர் சம்மதம் தெரிவித்தார்.இங்கு நான் கருதுவது என்னவென்றால் எந்தவிதமான சட்டக் காரணங்களும் எனது வருகையை தடை செய்யவில்லை, ஆனாலும் அங்கு புலிகளிருந்தார்கள். எனக்கு பாதுகாப்பு தேவையாகவிருந்தது. பாதுகாப்பு அதை அரசாங்கத்தினால் மட்டுமே வழங்க முடியும்.1999 ஜனவரியில் நான் திரும்பி வந்தேன். அதிகாரப்பரவலாக்கத்தை சந்திரிகா பண்டாரநாயக்கா வெளியிடுவார் என நான் நினைத்தேன்,அவரது மறுசீரமைப்புகளுக்கு நாம் ஆதரவாகவிருந்தோம்.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி,மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதை எதிர்த்தன.

2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா பிரபாகரனோடு ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார் அத்தோடு இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியிலானது.எனது பாதுகாப்பு நீக்கப் பட்டது, எனது வீட்டைச்சுற்றிலும் புலிகளின் ஆதரவு பாராளுமன்ற அங்கத்தவர்கள் குடியிருந்தனர். புலி அங்கத்தினர்கள் எவ்வித தடையுமின்றி அடுக்கு மாடிவீடுகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இந்தியாகூட எனது பாதுகாப்பைக் குறித்து எனக்கு எச்சரிக்கை செய்தது,திரும்பவும் நான் நாட்டைவிட்டு 2003ல் வெளியேற வேண்டியதாயிற்று.போர் முடிவடைந்த பின்பு பாதுகாப்பு பற்றிய பிரச்சனை அவ்வளவாக முக்கியம் பெறவில்லை.நான் இங்கேயே வேலை செய்யமுடியும் என நினைக்கிறேன்.ஆனால் நான் அரசாங்கத்துடனோ எதிர்கட்சியுடனோ சேரப்போவதில்லை.நான் திரும்பவும் எனது சொந்தப் பாதையைச் செதுக்குவேன்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக முக்கியமான பிரச்சனை மீள்குடியேற்றம்.மக்கள் முறையாக மீள்குடியமர்த்தப் படவில்லை. மககளிடம் எதுவுமே இல்லாதிருக்கும் போது,ஒரு சில கூரைத்தகடுகளும் சிறிதளவு பங்கீட்டு உணவுப் பொருளும் மக்களுக்கு போதுமானதாக இல்லை.அரசாங்கமும் சர்வதேச சமூகங்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையும் தொழில்களையும் மீளக்கட்டி எழுப்புவதற்கு தாராளமனமுள்ள உதவிகளைச் செய்யவேண்டும்.

அரசாங்கத்துக்கும் குடியியல் அமைப்பு நிறுவனங்களுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.அரசாங்கம் தனது சொந்தப் பொறிமுறைகளைக் கொண்டே சகலதையும் செய்வதற்கு எத்தனிக்கிறது, ஆனால் அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் தேவை, ஏனெனில் அவர்களுக்கு மக்களுடன் நல்ல தொடர்புகள் இருக்கின்றன.அரசாங்கம் அவைகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.தனது சொந்த நிருவாகப் பொறிமுறையில் மட்டும் தங்கியிருக்கக் கூடாது, ஏனெனில் அது கடந்த 20 வருடங்களாக புலிகளினால் சீரழிக்கப் பட்டு விட்டது.பல நிருவாக அலுவலர்களும் பிரபாகரனின் புகைப்படத்தை தங்கள் அலுவலகங்களில் தொங்கவிட்டு புலிகளுடன் இணைந்து வேலை செய்தவர்கள்தான்.அவர்கள் இப்போது அதை மறுபக்கமாகத் திருப்பி விட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அதே ஆட்கள்தான்.

வரப்போகும் வடமாகாணசபைத் தேர்தல்களில் அல்லது உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் திட்டம் ஏதாவது உங்களிடம் உள்ளதா?

மிகவும் முக்கியமான விடயம் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (PநுPசுடுகு.) கட்சியினைப் புனரமைப்பதே. இக் கட்சி வரப்போகும் தேர்தல்களில் போட்டியிடும் ஆனால் நான் போடடியிடுவது பற்றி இன்னமும் தீர்மானிக்க வில்லை,அது சார்ந்திருக்கிறது. எனது முக்கிய கவனம் யாவுமே எனது கட்சியும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டு எல்லாத் தமிழ் கட்சிகளிடையேயும் ஒருமனதான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுமே.நாங்கள் அதிகளவில் இன்னமும் சோஸலிஸ வாதிகள்தான் ஆனால் அது உடனடி நிகழச்சி நிரலில் இல்லை.இந்த நாட்டுக்கு முதல்தேவை இன்னமும் தீர்க்கப் படாதிருக்கும் இனமோதல்களை தீர்த்து வைப்பதே அது தீர்வடையும் போது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான இடையிலான புரிந்துணர்வு நிச்சயம் வளரும். அது ஐக்கியமான கட்சியினை உருவாக்கும் தளமாக அமையும்.

ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள அரசியல் விவகாரங்களைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்தை தனது நிகழச்சிநிரலின் மிக அடியில் போட்டு விட்டார். அவர் நினைக்கிறார் அவர் ஏற்கனவே நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி விட்டதால் அபிவிருத்தி மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வினைத் தந்து விடும் எனறு. அந்த எண்ணம் தவறானது.அபிவிருத்தியானது ஜனநாயகத்துடனும் அதிகாரப் பரவலாக்கத்துடனும் கையோடு கை சேர்;த்து நடைபோட வேண்டும். அதிகாரப் பரவலாக்கமில்லாது மக்களின் ஜனநாயக அபிலாசைகள் நிறைவடைந்து விடாது. அதிகாரப் பரவலாக்கமில்லாது அபிவிருத்தியை அடைந்து விட முடியாது,ஏனெனில் அரசியல் ஐக்கியம் அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சமமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

நீங்கள் சொல்கிறீர்கள் நாட்டுக்கு இன்னும் அதிகளவிலான அதிகாரப் பரவலாக்கல் தேவை என்று,ஆனால் அரசியலமைப்பின் 18வது திருத்தம் அதிகாரங்களை ஒருமுகப் படுத்துவதற்கே வழி நடத்துகிறதே?

ஆம். எல்லா அதிகாரங்களும் ஒரு ஆளையே மையமாகக் கொண்டு சுற்றி நிற்கின்றன. இது எல்லா அதிகாரங்களையும் ஒரு மந்திரி சபைக்கு ஒருமுகப்படுத்துவதை விட மோசமானது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு இவ்வளவு அதிகாரங்களையும் ஒரு ஆளிற்கே வழங்குவது, மிகவும் ஆபத்தானது.ஆனால் நாங்கள் காலவரையின்றி இதை ஒருவருக்கே வழங்கியுள்ளோம். அப்படிப்பட்ட மனிதர் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். எனவே 18வது திருத்தம் அதிகாரத்தைப் பன்முகப் படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது.

என்ன சாதகங்களை நீங்கள் காண்கிறீர்கள்? போர் முடிவடைந்து விட்டது.நீங்கள் மீண்டும் அரசியற்களத்தில் இறங்க முடியும் இதையிட்டு நீங்கள் மகிழச்சியடைகிறீர்களா?

எங்களிடம் இன்னமும் ஜனநாயகம் இருக்கிறது. நம்பகமாக சீக்கிரத்தில் அது ஒரு இராணுவ ஆட்சியாக முறுக்கடைந்து விடாது.அத்துடன் தமிழர்கள் யாருக்கும் பிரிவினை தேவையில்லை.பிரிவினைக்கான அவா முடிவடைந்து விட்டது. ஆனால் அது ஒரு சாதகமான அரசியல் முறையாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.ஆனால் அரசியல் முறைகள் விருத்தி செய்யப் பட வேண்டும்.ஏதோ தேர்தல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவதால் மட்டும் அரசியல் நாகரிகம் ஜனநாயகமாகி விட்டது என்கிற கருத்தாகி விடாது.இந்தப் பிரச்சனைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் வருங்காலங்களில் அதிகப் பிரச்சனைகள் தோன்றக் கூடும்.

ஒருகாலத்தில் வடகிழக்கு மாகாணசபையில் உங்களின் கீழ் அமைச்சராக இருந்த தயான் ஜயதிலகா உடன் இன்னமும் நீங்கள் தொடர்புகளை பேணி வருகிறீர்களா?

அவர் ஒரு அரை நாள் அமைச்சர். அவர் மதியம் அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்தார்,பிற்பகலில் வடகிழக்கை விட்டுப்புறப்பட்டார்,பின்பு திரும்பி வரவேயில்லை.ஆனால் அவர் அந்தப் பதவியை மதிப்புக்காக இன்னமும் பயன் படுத்துகிறார்.அவர் வடகிழக்கை விட்டுப் புறப்பட்ட போது விஜயகுமாரதுங்கவின் சித்தாந்தத்துக்கமைவான வேலைகளைத் தொடரப்போவதாக கூறிச் சென்றார்;. ஆனால் கொழும்பை அடைந்ததும் ஜனாதிபதி பிரேமதாஸ உடன் இணைந்து கொண்டார்

எனக்கு அவருடன் தனிப்பட்ட எதிர்ப்பு எதுவுமில்லை.ஆனால் நாங்கள் வடகிழக்கில் செய்தவைகளை அவர் விமர்சிக்கும் விதத்தில் எனக்கு அத்தனை மகிழச்சியில்லை. அந்த நாட்களில் நாங்கள் செய்தவைகளை எல்லாம் புகழ்ந்து தள்ளியவர் 10 வருடங்களின் பின் சொல்கிறார் நாங்கள் செய்தவைகள் எல்லாம் பிழையானவை என்று.அவர் இதை ஏன் செய்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அவைககளை அப்போதே ஏன் எதிர்க்கவில்லை.அவர் ஒரு செழுமையான எழுத்தாளர்,எந்தக் கருத்தரங்கிலும் ஆர்வத்துடன் பஙகு பற்றுபவர். ஆனால் அவர் பார்வையின் தெளிவு மிகக் குறைவு.

(நன்றி: லக்பிம நியூஸ்) தமிழில்: எஸ்.குமார் (தேனீக்கான மொழிபெயர்ப்பு)

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு.

Friday, October 8, 2010
ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளு மன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.

Tuesday, October 5, 2010

வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்-- புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது


Tuesday, October 5, 2010
புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள்.

இறுதிக்கட்ட போரின் போது பெரிதும் பாதிகப்பட்ட இடங்களை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் பார்வையிட்டனர். அங்கு தற்போது மீள் குடியேற்றம் நடைபெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர் பலரையும் மீண்டும் சந்தித்து உறவுகளை புதுப்பித்து கட்சி வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஐயம் செய்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் அங்கு நடைபெற்ற மீள் குடியேற்ற இடங்களை பார்வையிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- -----------
வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்.

மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எமது முன்னாள் தோழர் கணபதி கதிரவேலு (ரகுபரன்) அவர்களால் நடாத்தப்படும் ஸ்ரீஸ் கந்தராஐ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியினை மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் இசைக்குழுவினர் சார்பில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதிக்கு வாய்ப்பென்கிறார் றொபேர்ட் ஓ பிளேக்.

Tuesday, October 5, 2010
இலங்கையில் பல்வேறு இனங்களிடையே ஜனநாயத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குக் கிடைத்துள்ளதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூர பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றைத் தோற்கடித்துள்ளதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் வளமான அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கைகள் குறித்து சன்டியாகோவில் நடைபெற்ற உலக விவகாரங்கள் தொடர்பான உரையின்போதே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மோதல்கள் அற்றதும் காத்திரமான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டதாக இலங்கையின் எதிர்காலம் அமையவுள்ளதாக கொழும்பிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

வடமாகாண இலக்கிய விழா இறுதி நாள் விழா இன்று.

Tuesday, October 5, 2010
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆரம்பமான வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி 'மெட்றாஸ் மெயில் அரங்கில்' பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவை முன்னிட்டு கிளிநொச்சி பிரதான நகரிலிருந்து பண்பாட்டுப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடமாகாண ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் கௌரவ ஆளுநர் விருது என்பவை வழங்கல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்பவை இடம்பெறவுள்ள இவ்விழாவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழப்பு.

Tuesday, October 5, 2010
காலநிலை காரணமாக இதுவரை பத்துப்பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

உயிரிழந்தோரில் 6 பேர் மின்னல் தாக்கத்தினால் பலியானதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இவர்களைத் தவிர மேலும் ஆறுபேர் இயற்கை அனர்த்தங்களால் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் சொன்னார்.

மழைவெள்ளம் காரணமாக முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்தோருக்கு இழப்பீடுகள் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 30 வீடுகள் முற்றாகவும் 84 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி குறிப்பிட்டார்.

Monday, October 4, 2010

முப்பது வருடங்களின் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் எம்வசம்-பொலனறுவையில் ஜனாதிபதி!

Monday, October 4, 2010
முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில் மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம் பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவூ செலவூ திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றௌம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவூம் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவூம் ஐக்கியமாகவூம் வாழக்கூடிய சு+ழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றௌம்.

இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியூம்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையூம் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றௌர் உரிய பங்களிப்பையூம் அர்ப்பணிப்பையூம் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றௌர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றௌர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விடிவின் இன்னுமொரு பரிமாணம்!

Monday, October 4, 2010
இற்றைக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் தலை நகரில் நடமாடுவதென்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவதற்கு ஒப்பானது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மாதிரியான குண்டு வெடிக்கும் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருந்த காலம் அது. தலை நகரில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பாகத்தையும் இந்தப் பீதி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நடமாடும்போது ஒன்றில் கால்களை இழக்க நேரிடும் நிலை அல்லது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே காணப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த இந் நிலையை முற்றாக மாற்றி மக்கள் இன்று எந்தப் பீதியுமின்றி பருத்தித் துறை முதல் தேவேந்திர முனை வரையான முழு இலங்கைத் தீவிலும் சுதந்திரமாகவும் உயிருக்கான உத்தரவாதத்துடனும் நடமாடக் கூடிய நிலையை மிகக் குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாகத் தோற்றுவித்து இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நிற்கும் உதாரண புருஷரான நம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலப் பகுதி இந் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

அத்தோடு மட்டும் நின்று விடவில்லை நமது ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உலகுக்கு ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வகையான ஒரு நிகழ்வுதான் அன்மையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடந்தேறியது. அதாவது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சித்திரவதைக்குட்படுத்துவதற்கு மாறாக புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு துறைசார் தெழிற் பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக அவர்கள் தொழில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சுய தொழில் செய்ய இருப்பவர்களுக்கு இலகு வட்டியுடனான கடனாக இரண்டரை லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுமார் 403 பேர் கடந்த 30ஆம் திகதி காலை பத்து மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர்களது பெற்றௌர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது உலகிலேயே இலங்கையில்தான் முதன்முறையாகும்.

இவ்வாறு தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் பலர் கருத்து வெளியிடுகையில் “தாங்கள் புது மாத்தளனில் வைத்து கைது செய்யப்பட்டபோது இதன் பிறகு எமக்கென்றொரு எதிர்காலமில்லை மரணம்தான் எமது முடிவாக அமையப் போகிறது என்று நினைத்த எமக்கு ஆச்சரியமூட்டும் வகையில் எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யாமல் சிறைகளில் கூட எம்மை அடைத்து வைக்காது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைத்து தொழிற் பயிற்சிகள் வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி ஒளிமயமான எதிர்காலமொன்றை எமக்கு ஏற்படுத்த இந்த அரசாங்கத்துக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்களாக இருக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகர பிரதியமைச்சர், விஜிதமுனி சொய்சா ,அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Followers

Blog Archive